search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாவுபலி பொருட்காட்சி"

    • விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்
    • நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைதம்பி வழங்கினார்

    மார்த்தாண்டம் :

    குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வி.எல்.சி. திருமண மண்ட பத்தில் 98-வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 2 ந்தேதி தொடங்கி யது. 20 நாட்கள் நடைபெற்ற பொருட்காட்சியின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆணையாளர் ராம திலகம் முன்னிலை வகித்தார்.

    விழாவில் பொருட்காட்சியில் நடைபெற்ற ஆண்கள், பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி அளவிலான கபடி போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கள் வழங்கப்பட்டது.

    மேலும் பொருட்கா ட்சியில் வைக்கப்பட்டிருந்த விவசா யிகளின் விளை பொருட்கள், கைவினைப் பொருட்கள், கண்காட்சி பொருட்கள், ஓவியங்கள் போன்ற வற்றில் சிறந்த பொருட்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் பொன்.ஆசை தம்பி பேசும்போது, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பணிக்கு மட்டும், 2 வருடங்களில் சுமார் ரூ.5 கோடி ஒதுக்கப்ப ட்டுள்ளது. முதலில் ரூ.3 கோடியும், 2-வது முறையாக ரூ.2 கோடியும் ஒதுக்கப்பட்டு சாலைகள் போடப்பட்டுள்ளது. குடிநீர் வடிகால் வாரியத்தின் பைப் பதிக்கும் பணியினால் பணிகள் சரியான முறையில் செய்ய முடியாமல் தாமதமாகிவிட்டது.

    இருந்தாலும் எங்களால் முடிந்த அளவுக்கு சாலை களை போட்டு உள்ளோம். அடுத்த வாவுபலி பொரு ட்காட்சி நடைபெறுவதற்கு முன்பு அனைத்து சாலை களையும் கண்டிப்பாக சரி செய்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

    நிறைவு விழா நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பிரபின் ராஜா, கவுன்சிலர்கள் மெர்லின் தீபா, லலிதா, லில்லி புஷ்பம், ஜெயின் சாந்தி, செல்வகுமாரி, வக்கீல் ஷாஜிகுமார், அரு ள்ராஜ், விஜு, ரெத்தினமணி, சர்தார் ஷா, ரீகன், விஜய லட்சுமி, ரோஸ்லெட், மினி குமாரி, ஆட்லின் கெனில் மற்றும் நகராட்சி வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் சுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 98-வது வாவுபலி பொருட் காட்சி நேற்று மாலை தொடங்கியது.
    • பொருட்காட்சி திடலில் உள்ள பக்க காட்சி ஸ்டால்கள் திறந்து வைக்கப்பட்டது

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி ஆடி அமாவாசையை ஒட்டி நடைபெற்று வருகிறது இவ்வாண்டு நடைபெறும் 98-வது வாவுபலி பொருட் காட்சி நேற்று மாலை தொடங்கியது.

    நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் தொடர்ந்து வி.எல்.சி. திருமண மண்ட பத்தில் தொடக்க விழா நடைபெற்றது.

    நகராட்சி சேர்மன் பொன், ஆசைதம்பி தலை மை தாங்கினார். துணை தலைவர் பிரபின் ராஜா முன்னிலை வகித்தார். பக்க காட்சி காண்டிராக்டர் பால்ராஜ், திருவட்டார் பஞ். யூனியன் தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.பி. தி.மு.க மகளிர் அணி மாநில அமைப்பாளர் ஹெலன் டேவிட்சன், மேல்புறம் முன்னாள் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், வர்த்தக அணி நகர தலைவர் ஷாஜி லால், உண்ணாமலைக்கடை பஞ். தலைவர் பமலா, என்ஜினியர் பேரின்பம், கவுன்சிலர்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, ஜூலியட் மெர்லின் ரூத், மெர்லின் தீபா, லலிதா, லில்லி புஷ்பம், ஆட்லின் கெனில், ரீகன், விஜு, ரத்தின மணி, விஜயலட்சுமி, அருள்ராஜ், மினி குமாரி, ஜலீலா ராணி, ரவி, சர்தார் ஷா, ஜெயின் சாந்தி, செல்வகுமாரி, றோஸ்லெட், வக்கில் ஷாஜி குமார் மற்றும் நகர வர்த்தக சங்க துணைத் தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆணையாளர் ராமதில கம் நன்றி கூறினார்

    பொருட்காட்சி திடலில் உள்ள பக்க காட்சி ஸ்டால்கள் திறந்து வைக்கப்பட்டது பக்க காட்சியை இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெகநாதன் திறந்து வைத்தார்.

    பொருட்காட்சி வரும் 21-ந் தேதி வரை 20 நாள்கள் நடைபெறுகிறது பொருட்காட்சி முக்கிய தினமான ஆடி அமாவாசை வரும் 16-ந் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது இன்று முதல் கபடி போட்டி ஆரம்பமாகிறது.

    • கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று ஊரடங்கால் வாவுபலி பொருட்காட்சி நடைபெறாமல் இருந்தது
    • குழந்தைகளுடன் பலரும், நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோரம் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையையொட்டி குழித்துறை நகராட்சி நிர்வாகம் சார்பில் விவசாயி களின் விளை பொருட்களை கொண்டு பொருட்காட்சி நடத்தபடுவது வழக்கம்,

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று ஊரடங்கால் வாவுபலி பொருட்காட்சி நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டிற்கான 97-வது வாவுபலி பொருட் காட்சி கடந்த 14 -ம் தேதி குழித்துறையில் நகராட்சிக்கு சொந்தமான வி.எல்.சி. மைதானத்தில் துவங்கின, தொடர்ந்து 20 -நாட்கள் நடைபெறும் இந்த பொருட்காட்சியில் தினமும் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பார்வையாளகர்களை கவரும் ராட்டினங்கள், மரண கிணறு, என மக்கள் பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் விவசாய விளை பொருட்கள் கண்காட்சி யும் அடங்கி உள்ளதால் தினமும் ஏராளமான தமிழக கேரள மக்கள் திரண்டு பார்வையிட்டு வருகின்றனர், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் இந்த கூட்டம் மிக அதிகமாக இருந்தது. குறிப்பாக குழந்தைகளுடன் பலரும் வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ×